
சென்னை,
நேற்று சென்னை பூந்தமல்லியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, எத்தனை நெருக்கடிகள், எத்தனை துரோகங்கள், அத்தனைக்கும் மத்தியில்தான் நான் 31 ஆண்டுகளாக மதிமுகவை கட்டிப் பாதுகாத்து வருகிறேன். திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. திமுக கூட்டணியில்தான் நாங்கள் எந்த சூழ்நிலையிலும் நீடிப்போம்; திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார்.
இந்தநிலையில் ஜெயலலிதாவை சந்தித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு என்ற வைகோவின் கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அதில்,
வைகோவை தனிப்பட்ட முறையில் ரொம்ப பிடிக்கும். ஆனால் வைகோ நன்றியை மறந்துவிட்டு பேசுவது நல்லதல்ல. அதிமுக கூட்டணியில் இணைந்த பிறகு தான் மதிமுகவுக்கு அங்கீகாரமே கிடைத்தது என்றார்.