
பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7 நாட்கள் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வைகை பூர்வீக பாசன பகுதி II மற்றும் I-ற்கு முறையே (513-55) 458 மில்லியன் கன அடி மற்றும் 342 மில்லியன் கன அடி, மேலும் சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் வழங்க கையிருப்பு வைக்கும் நீரின் அளவான 216 மில்லியன் கன அடி தண்ணீரினை சேர்த்து ஆக மொத்தம் (458 + 342 + 216 = 1016 மில்லியன் கன அடி) இருப்பு வைத்தது போக இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதி II மற்றும் III-க்கு 25.06.2025 தேதி முதல் 01.07.2025 வரை 7 நாட்களுக்கு 1251 மில்லியன் கன அடி தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்துவிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.