அம்பையில் நகை, மணிபர்ஸ், செல்போன் திருடிய 2 பேர் கைது

6 hours ago 1

தேனி மாவட்டம், பெரியகுளம், வடக்குப் பூந்தோட்ட தெருவை சேர்ந்த சாய்குமார் (வயது 24), கடந்த 22ம்தேதி, அம்பாசமுத்திரம், நதியுண்ணி கால்வாய் அணைக்கட்டு கல்மடம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, காரின் டேஸ்போர்ட்டில் தான் அணிந்திருந்த செயின் மற்றும் மோதிரம் என மொத்தம் 22 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கழற்றி வைத்துவிட்டு நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். பின்பு குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த தங்க நகைகளை காணவில்லை.

இதேபோல் மேற்சொன்ன சாய்குமார் காரின் அருகே தென்காசி மாவட்டம், பெரியபிள்ளை வலசையை சேர்ந்த விக்னேஷ், தனது மோட்டார் பைக் சீட்டிற்கு அடியில், மணிபர்ஸ் மற்றும் செல்போனை வைத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். பின்பு வந்து பார்த்த போது மணிபர்ஸ் மற்றும் செல்போனை காணவில்லை.

இதுகுறித்து இருவரும் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் கோடாரங்குளத்தைச் சேர்ந்த முருகேசன்(32), சேரன்மகாதேவி, அரசடி முதல் தெருவை சேர்ந்த ஜீவா சந்திரபாலன்(25) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்சொன்ன திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

Read Entire Article