சென்னை: வேளாண் விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் வேளாண் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி குறித்த பெருமித அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், மத்திய புள்ளியியல் துறையோ 2024-25-ம் ஆண்டில் தமிழகத்தில் வேளாண்மை 0.09 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் வேறுபாடுகள் நிலவுகின்றன.