சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் மொத்தம் 417 பள்ளிகள் உள்ளன. சென்னை பள்ளிகளில் கடந்தாண்டு 6,000 மாணவர்கள் சேர்ந்த நிலையில் நடப்பாண்டில் 15,618 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக யூ.கே.ஜி.யில் 7,386 குழந்தைகள் சேர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
The post சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரிப்பு appeared first on Dinakaran.