வேதாரண்யத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

4 hours ago 2

வேதாரண்யம்,பிப்.12: வேதாரண்யத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க்கம், வேதாரண்யம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சட்ட விழிப்புணர்வு இயக்கம் வட்டார இயக்க மேலாளர் அம்புரோஸ் மேரி தலைமையில் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் அதற்கு தடுக்கும் சட்டங்கள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் சமூக நலத்துறை காவல்துறை மருத்துவத்துறை குழந்தைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

வட்டார அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சமுதாய வளபயிற்றுனர்கள், நம்தோழி, பாலினவளமைய செயல்பாட்டு குழு உறுப்பினர்கள், வட்டார வளபயிற்றுனர் அனைவருக்கும் வழக்கறிஞர் பாரி பாலன், வள பயிற்றுநர்  ரங்கபாணி சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தொடர்பான பயிற்சி அளித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

The post வேதாரண்யத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article