சென்னை: வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான மாத ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15,625ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் புலிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. தேனி, ஆனைமலை, முதுமலை, விருதுநகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமானோர் வேட்டை தடுப்பு காவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் காடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர். இந்த வேட்டை தடுப்பு காவலர்களுக்கு அரசு சார்பில் மாத ஊதியம் ரூ.12,500 வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான மாத ஊதியம் ரூ.12,500ல் இருந்து ரூ.15,625ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் 669 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் ரோந்து பணி, கண்காணிப்பாளர், சந்தன மர பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கு தினசரி ரூ.311ஆக அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு வேட்டைத் தடுப்பு காவலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கான மாத ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.