கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!!

2 hours ago 1

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அரசு மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த ஒரு மாதகாலமாக பள்ளி வராமல் இருந்துள்ளார்.

இதை தொடர்ந்து, தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில் மாணவி கர்ப்பம் அடைந்து கருக்கலைப்பு செய்திருப்பதாக தெரியவந்தது. பள்ளி மாணவியின் புகாரை அடுத்து அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து மறுகூர் அனைத்து காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்ட நிலையில், கைதான ஆசிரியர்கள் ஆறுமுகம், சின்னசாமி, பிரகாஷை சஸ்பெண்ட் செய்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

 

The post கிருஷ்ணகிரி அருகே மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைதான 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Read Entire Article