சென்னை: காடுகளில் வனவிலங்கு நடமாட்டம் பற்றிய உள்ளார்ந்த அறிவை கொண்ட பழங்குடியினர் உள்பட உள்ளூர்வாசிகள் வேட்டையாடுதல் தடுப்பு கண்காணிப்பாளர்களாக (ஏ.பி.டபுள்யூ) நியமிக்கப்பட்டனர். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. இதனை அரசு பரிசீலித்து 1.1.2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், வேட்டைத் தடுப்பு கண்காணிப்பாளர்களின் மாத ஊதியத்தை 12,500ல் இருந்து ரூ.15,625 ஆக உயர்த்த பரிசீலித்து வருவதாக தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
The post வேட்டை தடுப்பு கண்காணிப்பாளர் ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.