சாத்தூரில் பரபரப்பு 5 ரூபாய்க்கு 3 டீ சர்ட் வாங்க முண்டியடித்த இளைஞர் கூட்டம்

1 day ago 3

 

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் நேற்று புதிய ஜவுளிக்கடை தொடங்கினர். முதல் நாளன்று 5 ரூபாய்க்கு 3 டீசர்ட்டும், 125 ரூபாய்க்கு 2 சட்டையும் முதலில் வரும் ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்படும் என கடை நிர்வாகம் சார்பில் நகர் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த இளைஞர்கள் நேற்று காலை 7 மணி முதல் கடையின் முன்பு குவிந்தனர்.

அப்போது டோக்கன் வாங்க இளைஞர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால், சாத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். கூட்டத்தை கலைத்து வியாபாரத்தை நிறுத்தி வைத்தனர். இதனால் வரிசையில் நின்று டோக்கன் வாங்கியவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

The post சாத்தூரில் பரபரப்பு 5 ரூபாய்க்கு 3 டீ சர்ட் வாங்க முண்டியடித்த இளைஞர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article