சென்னை: வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி குடியிருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நிலத்தை விடுவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்துள்ளதாகவும், இக்குழு அளிக்கும் பரிந்துரையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமைச்சர் சு.முத்துசாமி நேற்று கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன் இடங்கள் எடுக்கப்பட்டு, ஆரம்பகட்ட பணியாக அதற்கான நோட்டீஸ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் எந்த நடவடிக்கையும் அதில் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த மனுக்கள் வந்தபோது, மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை சரிசெய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.