மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆர்ச்சை இடிக்கும்போது தூண் விழுந்து ஜேசிபி வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.
மதுரை நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தோரணவாயில்களை இடிக்க சமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி நேற்று இரவு போக்குவரத்து குறைந்த நிலையில் 10 மணிக்கு மேல் மாட்டுத்தாவணி அருகிலுள்ள நக்கீரர் தோரணவாயிலை இடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.