சிவகாசி, ஜன.23: வீடு புகுந்து பணத்ைத திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி கந்தபுரம் காலனி காமராஜர் சாலையை சேர்ந்தவர் முகம்மதுஜாபர்சித்திக்(33). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நாகூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. வீட்டின் உள்ளே சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களை மர்மநபர்கள் வெளியே எடுத்து வீசி விட்டு பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது குறித்து முகம்மது ஜாபர்சித்திக் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post வீடு புகுந்து பணம் கொள்ளை appeared first on Dinakaran.