விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர் கடன்: தமிழக வேளாண் பட்ஜெட் 2025 சிறப்பு அம்சங்கள்

3 hours ago 3

சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வரும் ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ.17,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.160 கோடியில் சிறப்பு தொகுப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மொத்தத்தில் வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு முதல் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தமிழக வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். காலை 9.31 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய அவர் 11.10 மணிக்கு நிறைவு செய்தார். பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:

Read Entire Article