சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கை: பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் கருதி மின்கட்டணத்தை அபராத தொகை இல்லாமல் செலுத்த டிச.10ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடு கருதி கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
The post விழுப்புரம் உள்பட 6 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த 10ம்தேதி வரை கால அவகாசம்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு appeared first on Dinakaran.