விராலிமலையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

6 months ago 30

 

விராலிமலை, அக்.17: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பேருந்து நிலையம் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்ற ஒருவரை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் ரொக்கம்,செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விராலிமலை சுற்றுப்பகுதியில் ஒரு சிலர் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கிவைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி நேற்று அப்பகுதிக்கு மாறுவேடத்தில் சென்ற தனிப்படை போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தள்ளு வண்டிகடையில் சுப்பிரமணி (54) என்பவர் அரசு மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதை கண்டறிந்த போலீஸார் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணியை கைது செய்து அவரிடம் இருந்து 32 பிராந்தி பாட்டில்கள், ரூ.1,720 ரொக்கம், 1 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post விராலிமலையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article