விபத்தில் மூதாட்டி பலி

4 months ago 11

 

தர்மபுரி, ஜன. 3: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் மணியக்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி குஞ்சம்மாள் (70). இவர் கடந்த 30ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த உறவினரான பச்சமுத்து என்பவருடன் டூவீலரில் கோயிலுக்கு சென்றார். நாகமரை – பென்னாகரம் சாலையில், நெருப்பூர் பகுதியில் சென்ற போது, திடீரென குஞ்சம்மாள் டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று முன்தினம் குஞ்சம்மாள் உயிரிழந்தார். இதுபற்றி ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விபத்தில் மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Read Entire Article