நித்திரவிளை: குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் பெல்சிட்டாள் (53). ஆசிரியை. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஸ்கூட்டரில் கச்சேரிநடை பகுதியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த சொகுசு கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பெல்சிட்டாள் கால் துண்டிக்கப்பட்டு பலியானார். இதுதொடர்பாக போதையில் கார் ஓட்டிய அஜினை (30) போலீசார் கைது செய்தனர்.
The post விபத்தில் ஆசிரியை பலி appeared first on Dinakaran.