வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

1 week ago 1

சேலம், ஏப்.9: சேலம் செவ்வாய்பேட்டை தேவாங்கபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை, வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வாலிபர் ஒருவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை பறிக்க முயன்றார். அவரிடமிருந்து தப்பித்த மணிகண்டன், உடனடியாக செவ்வாய்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்த போது, அவரிடம் பணத்தை பறிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(28) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article