வாலிபரை தாக்கிய ரவுடிகளுக்கு வலை

3 days ago 3

 

திருச்சி, மார்ச் 28: வாலிபரை தாக்கிய 3 ரவுடிகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி தென்னுார் பாலன் நகரை சேர்ந்தவர் சகாய பிரதாப் (43). மார்ச் 24ம் தேதி வீட்டில் இருந்த இவரை சரித்திர பதிவேடு ரவுடிகளான எ.புதுார், நல்லகேணி தெருவைச் சேர்ந்த பிரதாப் (41), கொல்லங்குளம் பாரதிநகரைச் சேர்ந்த அபுதாகீர் (36) மற்றும் இப்ராகிம் (40) ஆகியோர் தாக்கியுள்ளனர். காயமடைந்த சகாய பிரதாப் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

The post வாலிபரை தாக்கிய ரவுடிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article