வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

4 months ago 16

சென்னை: தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.26) தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிர புயலாக கரையைக் கடந்தது ‘டானா’ : இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (அக்.24) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர புயல் (டானா) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.25) அதிகாலை 1.30 -3.30 மணிக்கு இடையே வடக்கு ஒடிசா கடற்கரையில், பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒடிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது.

Read Entire Article