சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) (ம) சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் (ம) பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வகுப்புகள் நடத்தவுள்ளது.
தகுதிகள்:
*12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றியிருக்க வேண்டும்.
*குடும்ப ஆண்டு வருமானம் < ரூ.4.00 லட்சம்.
*இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
*உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும். இதனை www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளது தமிழ்நாடு அரசு..!! appeared first on Dinakaran.