வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

2 months ago 10

தென்காசி, நவ.23: தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் கடந்த 20ம் தேதி மழையின் காரணமாக அறிவிக்கப்பட்ட விடுமுறையினை ஈடுசெய்யும் பொருட்டு இன்று (23ம் தேதி) சனிக்கிழமை பள்ளி முழு வேலை நாளாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாக கலெக்டரால் அறிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக வரும் 30ம் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் தென்காசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article