புதிய அரசியல் பதிப்பகம் சார்பில், பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய ‘போர்கள் ஓய்வதில்லை’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன், விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சஞ்சுத்ரா மற்றும் பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புத்தகத்தின் முதல் பிரதியை விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் வெளியிட, விஜிபி குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொண்டார். விழாவில் ராமதாஸ் பேசியதாவது: