வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ திறந்து வைத்தார்

2 weeks ago 1

நாகர்கோவில், ஜன.25: வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்களை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ திறந்து வைத்தார். வல்லன்குமாரன்விளை அரசு மேல் நிலைபள்ளியில், புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.48 லட்சத்தை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ தனது சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்ட நிதி ஒதுக்கி இருந்தார். இதன்படி, கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை நேற்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். நிகழச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர் முத்துராமன், பா.ஜனதா கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், சிவசுதன், சிவசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article