4 ஆண்டுகளில் 6 ஆணையர் மாற்றத்தால் தள்ளாடும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்!

3 hours ago 2

மதுரை: மதுரை மாநகராட்சியில் ஆணையர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிர் வாகம் தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சியாக இருந்த மதுரை கடந்த 1971-ம் ஆண்டு மே 1-ல் மாநகராட்சியாக மாறியது. 72 வார்டுகள் இருந்தநிலையில், கடந்த 2011-ம் ஆண்டு மாநகராட்சியுடன் 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு வார்டுகள் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டது.

இணைக்கப்பட்ட புறநகரின் 28 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கே 14 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போதுதான் புதிய பாதாள சாக்கடை, புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள் செய்யாமலேயே சொத்து வரி மட்டும் பழைய மாநகராட்சி 72 வார்டுகளுக்கு இணையாக நிர்ணயம் செய்து வசூலிக்கப்படுகிறது.

Read Entire Article