சென்னை மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு 176 சதுர கிமீ பரப்பளவில் இருந்தது. சென்னை புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்ததால், சென்னையில் இருப்பது போன்று பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை அங்கும் ஏற்படுத்த வேண்டியிருந்தது.
அதற்காக கடந்த 2011-ம் ஆண்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகள் ஆகியவை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, அதன் எல்லை 426 சதுர கிமீ ஆக விரிவடைந்தது. ஆனால், அதே அளவுக்கு சென்னை மாவட்ட நிர்வாக எல்லை விரிவாக்கப்படவில்லை.