ஓடும் ரயிலில் தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் கருவில் சிசுவின் இதயத் துடிப்பு நின்றதால் அதிர்ச்சி!

3 hours ago 2

வேலூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ரயில்வே அதிகாரிகள், கருணை தொகையாக ரூ.50,000 வழங்கினர். இதற்கிடையில், ரேவதியின் கருவில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதால் சிசுவை அகற்ற மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெமினி (41). இவரது மனைவி ரேவதி (36). இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். ரேவதி கர்ப்பிணியாக இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்காக தனது தாயார் வீடான சித்தூர் மாவட்டத்துக்கு செல்வதற்காக கோவையில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பொது வகுப்பு பெட்டியில் வியாழக்கிழமை காலை புறப்பட்டார்.

Read Entire Article