சென்னை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நடந்தது வன்கொடுமை அல்ல பெண் கொடுமை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை குற்றம்சாட்டி உள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ‘‘தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதற்கு சாதிய ஒடுக்குமுறையே காரணம். அதை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது’’ என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், ‘‘வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். செல்வப்பெருந்தகையை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா?’’ என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்திருந்தார். மேலும், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.