![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37854079-sennai.gif)
சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ரூ.5,000 மேல் சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள 2 லட்சம் பேருக்கு கியூ ஆர் கோடு நோட்டீஸ் தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கியூ ஆர் கோடு மூலம் நிலுவையில் உள்ள வரியை செலுத்தலாம் என்றும், நீண்டகாலமாக வரி பாக்கி வைத்துள்ள 2 லட்சம் வணிக கட்டிடங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாமல் உள்ளவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.