வன்னியர் சங்க மாநாடு – மரக்காணம் வழி செல்லத் தடை

2 hours ago 1

விழுப்புரம்: மே 11 இல் மாமல்லபுரத்தில் நடக்கும் வன்னியர் சங்க மாநாட்டிற்கு மரக்காணம் ஈசிஆர் சாலை வழியாக செல்லத் தடை விதித்து விழுப்புரம் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கலவரம் எதிரொலியால் மாநாட்டில் பங்கேற்பவர்களின் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, கடலூர் இருந்து வரும் வாகனங்கள் திண்டிவனம், செங்கல்பட்டு வழியாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது; மதுபாட்டில்கள், ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 11ஆம் தேதி வன்னியர் சங்க மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

The post வன்னியர் சங்க மாநாடு – மரக்காணம் வழி செல்லத் தடை appeared first on Dinakaran.

Read Entire Article