வடமதுரை, ஜன. 17: வடமதுரை எஸ்ஐ பாண்டியன், ஏட்டு விவேக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது செங்குறிச்சி புதுப்பட்டி பகுதியில் புளியமரத்தின் அடியில் அமர்ந்து சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கே.புதுரை சேர்ந்த முனியசாமி (34), எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த நல்லாகமுத்து (46), ஆலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.600 பணத்தை பறிமுதல் செய்தனர்.
The post வடமதுரை அருகே சூதாடிய 3 பேர் கைது appeared first on Dinakaran.