
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவட்டும், இரண்டாவது யூனிட்டில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இரண்டாவது யூனிடில் உள்ள 2-வது அலகில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.