வடகாடு சம்பவத்தில் காவல் துறை ஒரு சார்பான போக்கு: திருமாவளவன் குற்றச்சாட்டு

2 hours ago 1

சென்னை: “வடகாடு சம்பவத்தில் புலன் விசாரணைக்கு முன்னரே காவல் துறை ஒரு முன்முடிவை எடுத்து அறிவிப்பது சரியா? ஒரு சார்பான இப்போக்கை காவல் துறை கைவிட வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள வடகாடு என்னுமிடத்தில் நேற்று (மே 5) நள்ளிரவில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் கொடூர ஆயுதங்களுடன் நுழைந்து, கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. அதில் ஆறு பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read Entire Article