வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.!!

4 months ago 14

சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. அது பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று(10ம் தேதி) சற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த தாழ்வு பகுதியாக மாறுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை – தமிழ்நாடு கடற்கரையை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நெருங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவடைந்த காற்றழுத்தம் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை – தமிழ்நாடு நோக்கி நகர்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைக்கு வாய்ப்பு என்பதால் டிச.11, 12 ஆகிய 2 நாட்களுக்கு ஆசஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. தமிழகத்தில் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.!! appeared first on Dinakaran.

Read Entire Article