வடகாடு சம்பவத்துக்கு காவல் துறை அலட்சியமும், செயலற்ற நிலையுமே முக்கியக் காரணம்: முத்தரசன்

3 hours ago 2

சென்னை: “வடகாடு கிராமத்தில் குடிபோதையில் இருந்த சிலரால் ஏற்பட்ட சம்பவம் சமூக மோதலாக சித்தரிக்கப்பட்டு, வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளன. இச் சம்பவம் கைமீறி சென்றதற்கு காவல் துறையின் அலட்சியமும், செயலற்ற நிலையும்தான் முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தகராறு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் வாய்மூடி மவுன சாட்சியாக நின்று இருந்தனர் என்பது வெட்கப்பட வேண்டிய செயலாகும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் கடந்த மே 5ம் தேதி, சமூகப் பொறுப்பற்ற சிலர், தங்களது இருசக்கர வாகனங்களுக்கு யார் முதலில் பெட்ரோல் போடுவது என்ற முனைப்பில், குடிபோதையில் செய்து கொண்ட தகராறு வன்மையாகக் கண்டிக்கதக்கது. இந்த தகராறு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் வாய்மூடி மவுன சாட்சியாக நின்று இருந்தனர் என்பது வெட்கப்பட வேண்டிய செயலாகும்.

Read Entire Article