வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் மேலும் தாமதம்

4 months ago 19

 சென்னை,

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக இன்று வலுப்பெறும் எனவும் இது மேலும் வலுப்பெற்று, 18-ம் தேதிக்கு மேல் மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.

இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை தொடங்கி புதுக்கோட்டை வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், டெல்டாவிலும் 17,18-ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read Entire Article