டெல்லி: வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்த நில வகைப்படுத்துதலும் மேற்கொள்ளக் கூடாது. 5 ரிட் மனுக்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். வக்பு சொத்துக்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொண்டு வரும் விசாரணை முடிவுகளை செயல்படுத்த கூடாது என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
The post வக்ஃபு திருத்தச் சட்டப்படி வாரியத்துக்கு புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.