லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

2 weeks ago 3

 

மதுரை, ஜன. 21: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கம்(38). இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் பார்சல் ஏற்றுவதற்காக நோ பார்க்கிங் பகுதியில் லாரியை நிறுத்தியிருந்தார். இந்நிலையில் புதுவிளாங்குடியை சேர்ந்த ராஜ்குமார்(28) பைக்கில் அந்த வழியாக வந்தார். லாரி நிறுத்தியிருப்பது தெரியாமல் அதன் பின் பக்கத்தில் மோதினார்.

இதில் படுகாயமடைந்த ராஜ்குமாரை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கூடல்புதூர் போக்குவரத்து போலீசில் ராஜ்குமாரின் தாயார் தமிழ்செல்வி அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் லாரி டிரைவர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article