ராமேஸ்வரம் – புதுச்சேரியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் : டி.ஆர்.பாலு

2 hours ago 2

டெல்லி : ராமேஸ்வரம் – புதுச்சேரியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வேத்துறைக்கான நாடளுமன்ற கூட்டத்தில் திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார். ரயில்வேத்துறைக்கான நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, “சென்னையின் மூன்றாவது முனையமான தாம்பரம் ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்களை நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்லி – புதுச்சேரி, புவனேஸ்வர்- புதுச்சேரி, புவனேஸ்வர் – ராமேஸ்வரம் ரயில்களை தாம்பரத்தில் நிறுத்த வேண்டும். பனாரஸ் – ராமேஸ்வரம், பிரோஸ்பூர் – ராமேஸ்வரம், அயோத்தியா -ராமேஸ்வரம் ஆகிய ரயில்களை தாம்பரத்தில் நிறுத்த அனுமதிக்க வேண்டும்,”என்று வலியுறுத்தினார். ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரயில்வே துறைக்கான நாடாளுமன்ற குழு தலைவர் சி.எம். ரமேசிடம் கடிதம் வழங்கினார் டி.ஆர்.பாலு.

The post ராமேஸ்வரம் – புதுச்சேரியில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள், தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் : டி.ஆர்.பாலு appeared first on Dinakaran.

Read Entire Article