செய்யாறு, பிப். 14: செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, மோகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக 4 பேரை கைது செய்தனர். செய்யாறில் பெரியார் சிலை அருகில் ரகளையில் ஈடுபட்டதாக வெங்கட்ராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார்(46), காய்கறி மார்க்கெட் பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாக வெங்கட்ராயன்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜா (32), பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாக அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த நேதாஜி (22), ஆரணி கூட்டுரோடு பகுதியில் ரகளையில் ஈடுபட்டதாக கண்ணியம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (25) ஆகிய 4பேரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல் தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ரோந்து பணியில் சென்ற போது காஞ்சிபுரம் வெம்பாக்கம் சாலையில் நமண்டி கூட்டு ரோட்டில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டதாக திருப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன்(24), சுரேந்தர் (21) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
The post ரகளையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யாறு, தூசி பகுதியில் appeared first on Dinakaran.