நியோமேக்ஸ் சொத்துகளை முடக்கக் கோரி வழக்கு: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

3 hours ago 3

நியோமேக்ஸ் நிறுவன சொத்துகளை முடக்கக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் சங்கச் செயலாளர் சங்கரநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் பல்வேறு நகரங்களில் அலுவலகம் தொடங்கி, பொதுமக்களிடம் முதலீடு வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக, மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிந்து, நியோமேக்ஸ் இயக்குநர்கள், முகவர்கள் என பலரைக் கைது செய்துள்ளனர்.

Read Entire Article