சென்னை: தருமபுரி அருகே யானையை கொன்று தந்தம் திருடிய வழக்கில் தலைமறைவாக குற்றவாளியை விரைந்து கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பென்னாகரம் அடுத்த நெருப்பூரில் மார்ச் 1ல் யானையை கொன்று தந்தம் திருடப்பட்டது தெரிய வந்தது. வழக்கில் யானையின் பிரேத பரிசோதனை அறிக்கையை வனத்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. விசாரணை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஐகோர்ட் வழக்கை ஏப்ரல்.3க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
The post யானை வேட்டை: குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.