லண்டனில் நீரவ் மோடி ஜாமீன் மனு நிராகரிப்பு

7 hours ago 2

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி இங்கிலாந்து தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்த இந்திய புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து சட்ட முயற்சி எடுத்து வருகின்றன. கடந்த 2019ல் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனு லண்டன் உயர் நீதிமன்றத்தில் நேற்று நிராகரிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து நீரவ் மோடி 10வது ஜாமீன் மனு தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post லண்டனில் நீரவ் மோடி ஜாமீன் மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article