மெரினாவில் குப்பை கொட்டுவதை தடுக்க சிறப்பு படைகள் அமைத்து அபராதம் விதிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

2 weeks ago 4

சென்னை: மெரினா கடற்கரையை குப்பை கூளமாக்கிய விவகாரத்தில், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் தினத்தன்று மெரினா கடற்கரையில் ஏராளமானோர் குவிந்தனர். இதனல், கடற்கரை முழுவதும் குப்பை கூளமாக மாறியது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரித்தனர். அப்போது நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, தனக்கு வந்த இரு புகைப்படங்களை சுட்டிக்காட்டி, மெரினா கடற்கரையில் காணும் பொங்கல் பண்டிகையை ஒட்டி குப்பை கூளமாக்கியது குறித்து கேள்வி எழுப்பினார்.

கடற்கரையை எப்படி பாதுகாப்பது என மக்களுக்கு தெரியவில்லை என வேதனை தெரிவித்த தீர்ப்பாயம், காணும் பொங்கலுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது என அரசுக்கு பரிந்துரைக்க உள்ளதாகக் குறிப்பிட்டது. அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான சண்முகநாதன், குப்பை கொட்டுவதை குற்றமாக கருதி, அபராதம் விதிக்காவிட்டால் இதை தடுக்க முடியாது எனவும், படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், குப்பையை வீசிச் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து, குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும் வகையில் சிறப்பு படைகளை அமைக்க வலியுறுத்திய தீர்ப்பாயம், இது குறித்து சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

The post மெரினாவில் குப்பை கொட்டுவதை தடுக்க சிறப்பு படைகள் அமைத்து அபராதம் விதிக்க வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article