மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு கண் பார்வை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

3 hours ago 2

சென்னை: மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது போலீஸாரின் தாக்குதலில் ஒரு கண் பார்வை இழந்த இளைஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த விமலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜன.17 முதல் ஜன.23 வரை இளைஞர்கள் திரண்டு தொடர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கடந்த 2017 ஜன.23 அன்று பிற்பகல் 3 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.

Read Entire Article