
மெக்சிகோ,
மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய எமிலியானா 6-3,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.