வேலூர், மார்ச் 20: காட்பாடி விருதம்பட்டு டாக்டர் கோபாலகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் சொர்ணலதா(63). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இதனை நோட்டமிட்ட பெங்களூரைச் சேர்ந்த மணிகண்டன்(28) என்பவர், கடந்த 17ம் தேதி இரவு மூதாட்டி வீட்டின் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே நுழைந்தார். வாலிபரை பார்த்ததும் சொர்ணலதா அலறி கூச்சலிட்டார். இதனை ேகட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பொதுமக்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சுவர் மீது மீண்டும் ஏறி குதித்த வாலிபர் கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை பிடித்த பொதுமக்கள் விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மூதாட்டி வீட்டில் திருட சுவர் ஏறி குதித்தவர் படுகாயம் காட்பாடி விருதம்பட்டில் appeared first on Dinakaran.