நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நேற்று முன்தினம் 10 காசுகள் உயர்ந்தது. நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ் முட்டை விலையில் மேலும் 25 காசுகள் உயர்த்தினார். இதன்படி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 450 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளாகள் சங்க செயலாளர் சுந்தர்ராஜன் கூறுகையில், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கடுமையான வெப்பம் வீசி வருகிறது. இதனால் கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி 10 சதவீதம் வரை குறைந்துவிட்டது. மேலும் ரம்ஜான் விரதம் முடிவதால், வரும் நாட்களில் முட்டை விற்பனை அதிகரிக்கும். மேலும் மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்துள்ளதால் அதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளது, என்றார்.
The post முட்டை விலை 25 காசு அதிகரிப்பு appeared first on Dinakaran.