மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவு

3 hours ago 2

நய்பிடாவ்,

மியான்மரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 19.26 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 96.38 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக நேற்று நள்ளிரவு 11.04 மணியளவில் ரிக்டர் 3.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

EQ of M: 3.8, On: 21/04/2025 02:47:48 IST, Lat: 19.26 N, Long: 96.38 E, Depth: 10 Km, Location: Myanmar. For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/xj4vwIVviq

— National Center for Seismology (@NCS_Earthquake) April 20, 2025
Read Entire Article